வடக்கிலும் போட்டி ரி.எம்.வி.பி

Posted by maanamulathamilan On AM 12:10 Categories:

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது. இத் தகவலைக் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார்.

வட பதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்த வுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் நாளை 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி கிழக்குப் பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மெளலானா கூறியுள்ளார்.