இந்தோனேசியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேசிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் மேற்கொண்டு தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.குடிவரவு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் ஐநா அகதிகள் தொடர்பான அதிகாரிகளை குறித்த இடத்திற்கு அழைத்து வர இந்தோனிசிய குடிவரவு அதிகாரிகள் இணங்கியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்தே தாம் கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மெரேக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்
Posted by
maanamulathamilan
On
PM 12:30
Categories: