பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்ததை அடுத்து தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புதிய வேட்பாளர்கள் உற்சாகம் இழந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமையில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் பல கோடி ரூபா பணத்தை செலவிட்ட துமிந்த சில்வா மற்றும் திலங்க சுமதிபால போன்றவர்கள் கூட இம்முறை பணத்தைச் செலவிட முன்வரவில்லையென்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில், இம்முறை பொதுத் தேர்தலுக்கு அதிகளவில் பணத்தைச் செலவிட்டு வருபவர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எனத் தெரியவந்துள்ளது. விமல் வீரவங்ச இதுவரை 100 மில்லியன் ரூபா பணத்தை கொழும்பு மாவட்ட ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளார்.
பல கோடி ரூபா செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் பெறுவது போதிய பலனளிப்பதாக அமையாது என பல புதிய வேட்பாளர்கள் கருதுகின்றனர்.
அமைச்சரவை குறைக்கப்படும் என்ற அறிவிப்பினால் புதிய வேட்பாளர்கள் பணம் செலவிட பின்வாங்குகின்றனர்!!!
புலம்பெயர் தமிழர்போராட்டங்களால் சிறீலங்காவுக்கு நெருக்கடி: சிங்கள இணையம்
மெரேக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்
சிறீலங்காவால் கைது செய்யப்பட்ட 4000 போராளிகள் எங்கே?
வடக்கிலும் போட்டி ரி.எம்.வி.பி
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது. இத் தகவலைக் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா தெரிவித்துள்ளார்.
வட பதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்த வுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் நாளை 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி கிழக்குப் பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மெளலானா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் அமெரிக்க உச்ச நீதிமன்றில் வாதாட உள்ளார் உருத்திரகுமாரன்
விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் முதல் தடவையாக தமிழ் சட்டவாளர் ஒருவர் அமெரிக்க உச்ச நீதிமன்றில் தோன்றி வாதாட இருக்கிறார்.
நியூயோர்க் வாழ் ஈழத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரனே அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை [23-02-10] வாதாட உள்ளார்.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராக அவர் வாதாடுவார்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்தலுக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவி நிற்பதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார்.
யார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்பது பற்றியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகளை வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அவர் வாதாட உள்ளார்.
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, இராஜாங்கத் திணைக்களத்தால் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றிற்கு வழங்கப்படும் மனிதார்ந்த உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
விஸ்வநாதன் உருத்திரகுமாரன்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்ற உள்ள முதல் ஈழத் தமிழ் சட்டவாளர் என்று மனித உரிமைகள் ஆணையக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றமே அமெரிக்காவில் உள்ள அதி உயர் நீதி நிறுவனமாகும்.
உருத்திர குமாரனின் இந்த நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்காகப் புலம்பெயர் தமிழர்கள் சட்டரீதியான மற்றும் வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையே காட்டுகின்றது எனவும் மனித உரிமைகள் ஆணையகக் குறிப்பு கூறுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க 8 ஆயிரம் உள்ளுர் கண்காணிப்பாளர்கள் - பவ்ரல்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கா 8 ஆயிரம் உள்ளுர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
இதேநேரம் அனைத்து மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளது.
உள்ளுர் கண்காணிப்பாளர்கள் 1500 பேர் சுயாதீனமான கண்காணிப்பாளர்களாக பொதுவான கண்காணிப்பில் ஈடுபடுவர் என பவ்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.