பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்ததை அடுத்து தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புதிய வேட்பாளர்கள் உற்சாகம் இழந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் பல கோடி ரூபா பணத்தை செலவிட்ட துமிந்த சில்வா மற்றும் திலங்க சுமதிபால போன்றவர்கள் கூட இம்முறை பணத்தைச் செலவிட முன்வரவில்லையென்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கோடி ரூபா செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மாத்திரம் பெறுவது போதிய பலனளிப்பதாக அமையாது என பல புதிய வேட்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், இம்முறை பொதுத் தேர்தலுக்கு அதிகளவில் பணத்தைச் செலவிட்டு வருபவர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எனத் தெரியவந்துள்ளது.

விமல் வீரவங்ச இதுவரை 100 மில்லியன் ரூபா பணத்தை கொழும்பு மாவட்ட ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்காக செலவிட்டுள்ளார்.