ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓர் சர்வதேச சதித் திட்டமாகும் என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய நூலக மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வதேச சதித் திட்டம் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியை பொறுப்பேற்றது முதல் ஆட்சி கவிழ்க்க அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பிரயத்தனம் மேற்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுயுறுத்தியே அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு கிறீன் கார்ட் வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.